| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 16 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 4 | உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார் நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4 | ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்,Aayar - இடையர்கள் உறியை,Uriyai - (பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை முற்றத்து,Mutrathu - முற்றத்திலே உருட்டி நின்று,Urutti nindru - உருட்டிவிட்டு ஆடுவார்,Aaduvaar - கூத்தாடுவார் சிலரும், நறு,Naru - மணம்மிக்க நெய் பால்தயிர்,Ney paalthayir - நெய்யையும் பாலையும் தயிரையும் நன்றாக,Nandraaga - நிச்சேஷமாக தூதுவார்,Thoothuvaar - தாநம் பண்ணுவார் சிலரும், செறி மென்,Seri men - நெருங்கி மெத்தென்றிருக்கிற கூந்தல்,Koondhal - மயிர்முடியானது அவிழ,Avizha - அவிழ்ந்து கலையும்படி திளைத்து,Thilaiththu - நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக, எங்கும்,Engum - சேரியடங்கலும் அறிவு அழிந்தனர்,Arivu azhindhanar - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர். |