| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 163 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2 | பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! இவன்,Ivan - இப் பிள்ளை முன்னம்,Munnam - முன்பு பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த பிள்ளை,Pillai - பிள்ளை காண் மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள சகடும்,Sagadum - சகடத்தையும் மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும் இறுத்தவன்,Iruththavan - முறித்தவன் காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன் கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன் கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை வந்து,Vandhu - (நீ) வந்து தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக. தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் |