Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 164 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
164ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3
திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
திரை,Thirai - பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
விழுங்கி,Vizhunki - உட் கொண்டு
விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமியும்
அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை,Perumanai - நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற
வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக