| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 164 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3 | திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3 | அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! திரை,Thirai - பின்னுதலை யுடைய உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள வெண்ணெய்,Vennai - வெண்ணெயை விழுங்கி,Vizhunki - உட் கொண்டு விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து) உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற அண்ணல்,Annal - ஸ்வாமியும் அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு பெருமானை,Perumanai - நிர்வாஹகனும் ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே! கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |