Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 167 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
167ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 6
கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
கேடு இலாதார்,Kedu ilaadhaar - (வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை,Kizhakkil kudi mannarai - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்,Azhippaan - அழிக்கும் படி
நினைந்திட்டு,Ninaindittu - எண்ணி
அவ் வாழி அதனால்,Av vaazhi athanaal - அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே,Vizhikkum alavile - கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை,Ver arutthaanai - ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு,Kuzharku - கூந்தலுக்கு
அணி ஆக,Ani aaga - அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்,Govindan - (இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்,Than kuzhal - குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்,Vaarai - வாருவாயாக.