Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 168 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
168ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 7
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
பிண்டம் திரளையும்,Pindam thiralaiyum - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட,Peykku itta - பிசாசங்களுக்குப் போகட்ட
நீர் சோறும்,Neer sorum - நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு,Undarkku - உண்ணுதற்கு
வேண்டி,Vendi - விரும்பி
நீ ஓடி திரியாதே,Nee odi thiriyadhe - நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து,Andathu - மேலுலகத்திலுள்ள
அமரர்,Amarar - தேவர்களுக்கு
பெருமான்,Perumaan - தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்,Azhagu amar - அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட,Vandu othu irunda - வண்டைப் போல் கருநிறமான
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
மாயவன் தன்,Maayavan than - ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக