திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 169 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
169பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 8
உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8
பதவுரை Show / Hide
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
உந்தி,Undhi - (தனது) திருநாபியிலே
எழுந்த,Ezhntha - உண்டான
உருவம்,Uruvam - ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்,Malar thannil - தாமரைப் பூவிலே
சந்தம்,Sandham - சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை,Sathumugan thannai - நான்முகனை
படைத்தவன்,Padaithavan - ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை,Puli atti kondham kuzhalai - புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்,Thandathin seepal - தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து,Kurandhu - சிக்கு விடுத்து
குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-,Akkakkai - (இந்த) தாமோதரனுடைய குளிர்ந்த (சிறந்த) குழலை வாருவாயாக.