Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 170 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
170ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 9
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து
பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய்
பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
முன்,Mun - வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்,Mannan than - அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்,Devimaar - மனைவியர்கள்
கண்டு,Kandu - (தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த,Magizhvu aiththa - மகிழ்ச்சி யடையும்படி
இ உலகினை முற்றும், E ulakini mutrum - (மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்,Alandhavan - அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை,Pon mudhiyinai - அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து,Pooanai meel vaiththu - புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து,Pinne irundhu - (இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்,Kuzhal vaarai - அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்,Per aayiraththaan - ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக