திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 171 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
171பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10
கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன் வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10
பதவுரை Show / Hide
அக் காக்காய்,Akkakkai - காக்கையே!
கண்டார்,Kandar - பார்த்தவர்கள்
பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி
கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார,Vaar - வாரும்படி
வா,Vaa - வருவாயாக
என்ற,Endru - என்று சொன்ன
ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின்
சொல்,Sol - சொல்லை (க்குறித்த)
விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்,Mathil - மதிளை யுடைய
வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய
சொல்,Sol - அருளிச் செயல்களை
கொண்டாடி,Kondaadi - சிலாகித்து
பாட,Paada - பாடப் பெற்றால்
வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா,Kurugaa - சேராவாம்.