| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 172 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 1 | வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1 | (அக்காக்காய்),Akkakkai - காக்கையே! வேலிக்கோல்,Velikkol - வேலிக் கால்களிலுள்ள கோலை வெட்டி,Vetti - (வாளால்) வெட்டி (அதை) விளையாடு வில்,Vilaiyadu Vil - லீலோபகரணமான வில்லாகச் செய்து ஏற்றி,Etri - (அதிலே) நாணேற்றியும், கொழுந்து தாலியை,Kozhundu Thalaiyai - சிறந்த ஆமைத் தாலியை தடங்கழுத்தில்,Thadankazhuthil - (தனது) பெரிய கழுத்திலே பூண்டு,Poondu - அணிந்து கொண்டும் பீலித் தழையை,Peelith Thazhaiyai - மயில் தோகைகளை பிணைத்து,Pinaittu - ஒன்று சேர்த்து பிறகு இட்டு,Piragu Ittu - பின் புறத்திலே கட்டிக் கொண்டும் காலி பின்,Kaali Pin - பசுக் கூட்டங்களின் பின்னே போவாற்கு,Povarku - போகி்ன்ற இவனுக்கு ஓர் கோல்,Or Kol - ஒரு கோலை கொண்டு வா கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Niram Vannarku Or Kol Kondu Va - கடல் நிறம் வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |