திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 172 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
172பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 1
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1
பதவுரை Show / Hide
(அக்காக்காய்),Akkakkai - காக்கையே!
வேலிக்கோல்,Velikkol - வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி,Vetti - (வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்,Vilaiyadu Vil - லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி,Etri - (அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை,Kozhundu Thalaiyai - சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்,Thadankazhuthil - (தனது) பெரிய கழுத்திலே
பூண்டு,Poondu - அணிந்து கொண்டும்
பீலித் தழையை,Peelith Thazhaiyai - மயில் தோகைகளை
பிணைத்து,Pinaittu - ஒன்று சேர்த்து
பிறகு இட்டு,Piragu Ittu - பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்,Kaali Pin - பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு,Povarku - போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்,Or Kol - ஒரு கோலை கொண்டு வா
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Niram Vannarku Or Kol Kondu Va - கடல் நிறம் வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா