Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 172 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
172ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 1
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1
(அக்காக்காய்),Akkakkai - காக்கையே!
வேலிக்கோல்,Velikkol - வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி,Vetti - (வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்,Vilaiyadu Vil - லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி,Etri - (அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை,Kozhundu Thalaiyai - சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்,Thadankazhuthil - (தனது) பெரிய கழுத்திலே
பூண்டு,Poondu - அணிந்து கொண்டும்
பீலித் தழையை,Peelith Thazhaiyai - மயில் தோகைகளை
பிணைத்து,Pinaittu - ஒன்று சேர்த்து
பிறகு இட்டு,Piragu Ittu - பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்,Kaali Pin - பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு,Povarku - போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்,Or Kol - ஒரு கோலை கொண்டு வா
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Niram Vannarku Or Kol Kondu Va - கடல் நிறம் வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா