| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 173 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 2 | கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல் அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2 | கொங்கு,Kongu - வாஸனை பொருந்திய குடந்தையும்,Kudanthaiyum - திருக் குடந்தையிலும் கோட்டி ஊரும்,Kotti Uurum - திருக் கோட்டியூரிலும் பேரும்,Perum - திருப்பேர் நகரிலும் எங்கும்,Engum - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம் திரிந்து,Thirindhu - ஸஞ்சரித்து விளையாடும்,Vilaiyaadum - விளையாடுகின்ற என் மகன்,En Magan - என் பிள்ளையினுடைய சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு,Sangam Pidikkum Thadakkaikku - பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு தக்க,Thakka - தகுந்ததான நல் அங்கம் உடையது,Nal Angam Udaiyathu - நல்ல வடிவை யுடையதாகிய ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா அரக்கு வழித்தது,Arakku Vazhithathu - (நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய ஓர் கோல் கொண்டுவா,Or Kol Konduva - ஒரு கோலை கொண்டு வா |