Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 173 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
173ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 2
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல்
அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2
கொங்கு,Kongu - வாஸனை பொருந்திய
குடந்தையும்,Kudanthaiyum - திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்,Kotti Uurum - திருக் கோட்டியூரிலும்
பேரும்,Perum - திருப்பேர் நகரிலும்
எங்கும்,Engum - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து,Thirindhu - ஸஞ்சரித்து
விளையாடும்,Vilaiyaadum - விளையாடுகின்ற
என் மகன்,En Magan - என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு,Sangam Pidikkum Thadakkaikku - பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க,Thakka - தகுந்ததான
நல் அங்கம் உடையது,Nal Angam Udaiyathu - நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
அரக்கு வழித்தது,Arakku Vazhithathu - (நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா,Or Kol Konduva - ஒரு கோலை கொண்டு வா