| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 174 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 3 | கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன் னோடி சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3 | கறுத்திட்டு,Karuthittu - கோபித்து எதிர் நின்ற,Ethir Nindra - தன்னை எதிரிட்டு நின்ற கஞ்சனை,Kanjanai - கம்ஸனை கொன்றான்,Konraan - கொன்றவனும் எதிர் வந்த,Ethir Vandha - (தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த புள்ளின்,Pullin - பகாஸுரனுடைய வாய்,Vaai - வாயை பொறுத்திட்டு,Poruthittu - (முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து கீண்டான்,Keendaan - (பின்பு) கிழித்தவனும் நெறித்த,Neritha - நெறித்திரா நின்றுள்ள குழல்கள்,Kuzhalgal - கூந்தல்கள் நீங்க,Neenga - ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக முன் ஓடி,Mun Odi - கன்றுகளுக்கு முன்னே போய் சிறு கன்று,Siru Kanru - இளங்கன்றுகளை மேய்ப்பாற்கு,Meipparkku - மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Devapiranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |