| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 176 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 5 | சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5 | துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக சீர் ஒன்று தூது ஆய்,Seer Ondru Thoodhu Aai - சிறப்பு பொருந்திய தூதனாகப் போய் ஊர் ஒன்று வேண்டி,Oor Ondru Vendi - (பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும் பெறாத,Peraadha - அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான உரோடத்தால்,Urodathaal - சீற்றத்தாலே பார் ஒன்றி,Paar Ondri - பூமியில் பொருந்தி யிருந்து பாரதம் கை செய்து,Baaratham Kai Seidhu - பாரத யுத்தத்தில் அணி வகுத்து பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு,Ther Ondrai Oornthaarkku - ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா—;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Deva Piranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |