| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 177 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 6 | ஆலத் திலையான் அரவினணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6 | ஆலத்து இலையான்,Aalathu Ilaiyaan - (ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும் அரவின் அணை மேலான்,Aravin Anai Melan - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும் நிலம் கடலுள்,Nilam Kadalul - கரு நிறமான சமுத்திரத்தில் நெடுங்காலம்,Nedunkaalam - வெகு காலமாக கண் வளர்ந்தான்,Kann Valarnthaan - யோக நித்ரை செய்பவனும் பாலம் பிராயத்தே,Paalam Pirayathe - குழந்தைப் பருவமே தொடங்கி பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு அருள் செய்த,Arul Seidha - க்ருபை செய்த கோலம்,Kolam - அழகிய வடிவத்தை யுடைய பிரானுக்கு,Piranukku - தலைவனுமான இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.,Kudanthai Kidanthaarkku Or Kol Kondu Va - குடந்தை கிடந்தாற்கு ஒரு கோலை கொண்டு வா |