Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 178 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
178ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 7
பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7
(அக்காக்காய்!),Akkakkai - காக்கையே!
பொன்,Pon - அழகியதாய்
திகழ்,Thigal - விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்,Chithira Koodam Poruppinil - சித்ர கூட மலைச் சாரலில் (பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்,Vadivil - (பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற,Utra - பதிந்த
ஒரு கண்ணும்,Oru Kannum - (உனது இரண்டு கண்களில்) ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட,Konda - பறித்துக் கொண்ட
அ கற்றை குழவன்,A Kattrai Kuzhavan - அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்,Kadiyan - க்ரூரன்;
உன்னை,Unnai - (ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக) உன்னை (ச்சீறி)
மற்றை கண்,Matrai Kann - (உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே,Kollamae - பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து,Viraindhu - ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.,Manivannan Nambikku Or Kol Kondu Va - மணிவண்ணன் நம்பிக்கு ஒரு கோலை கொண்டு வா