| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 178 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 7 | பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7 | (அக்காக்காய்!),Akkakkai - காக்கையே! பொன்,Pon - அழகியதாய் திகழ்,Thigal - விளங்குகின்ற சித்திர கூடம் பொருப்பினில்,Chithira Koodam Poruppinil - சித்ர கூட மலைச் சாரலில் (பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது) வடிவில்,Vadivil - (பிராட்டியின்) திரு மேனியில் உற்ற,Utra - பதிந்த ஒரு கண்ணும்,Oru Kannum - (உனது இரண்டு கண்களில்) ஒரு கண்ணை மாத்திரம் கொண்ட,Konda - பறித்துக் கொண்ட அ கற்றை குழவன்,A Kattrai Kuzhavan - அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன் கடியன்,Kadiyan - க்ரூரன்; உன்னை,Unnai - (ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக) உன்னை (ச்சீறி) மற்றை கண்,Matrai Kann - (உனது) மற்றொரு கண்ணையும் கொள்ளாமே,Kollamae - பறித்துக் கொள்ளாதபடி விரைந்து,Viraindhu - ஓடிப் போய் ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.,Manivannan Nambikku Or Kol Kondu Va - மணிவண்ணன் நம்பிக்கு ஒரு கோலை கொண்டு வா |