| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 179 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 8 | மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8 | மின்,Min - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான) இடை,Idai - இடையை யுடைய சீதை பொருட்டா,Seethai Porutraa - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக இலங்கையர் மன்னன்,Ilangaiyar Mannan - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய மணி முடி பத்தும்,Mani Mudi Paththum - ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும் உடன் வீழ,Udan Veezha - ஒரு சேர அற்று விழும்படி தன்னிகர் ஒன்று இல்லா,Thannigar Ondru Illaa - தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த) சிலை,Silai - வில்லை கால் வளைத்து இட்ட,Kaal Valaithu Itta - கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த மின்னும் முடியற்கு,Minnum Mudiyarkku - விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு வேலை அடைத்தாற்கு,Velai Adaiththaarkku - ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா-,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா |