| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 18 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 6 | கையும் காலும் நிமிர்த்து கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால் ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6 | கையும்,Kaiyum - திருக்கைகளையும் காலும்,Kaalum - திருவடிகளையும் நிமிர்த்து,Nimirththu - (நீட்டி) நிமிர்த்து கடாரம்,Kadhaaram - கடாரத்தில் (காய்ச்சின) நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்திலே பசு சிறு மஞ்சளால்,Pasu siru manjalal - குறுங்கண்ணான பசு மஞ்சளால் பைய,Paiya - திருமேனிக்குப் பாங்காக ஆட்டி,Aatti - ஸ்நாநம் செய்வித்து ஐய,Ayya-mellidhaana - மெல்லிதான நா,Naa - நாக்கை வழித் தாளுக்கு,Vazhi thaalukku - வழித்தவளான யசோதைக்காக அங்காந்திட,Angaandhida - (கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்) பிள்ளை,Pillai - கண்ணபிரானுடைய வாயுள்,Vaayul - வாயினுள்ளே வையம் ஏழும்,Vaiyam ezhum - உலகங்களையெல்லாம் கண்டாள்,Kandaal - ஸாக்ஷத்கரித்தாள். |