| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 181 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன் ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10 | அக்காக்காய்,Akkakkai - காக்கையே! நம்பிக்கு கோல் கொண்டுவா என்று,Nambikku Kol Kondu Va Endru - உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று மிக்கான் உரைத்த சொல்,Mikkaan Uraiththa Sol - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை வில்லி புத்தூர் பட்டன்,Villi Puththoor Pattam - ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்,Okka Uraiththa Tamil Paththum Vallavar - அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்,Makkalai Pettru I Vayaththae Magizhvar - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர் |