Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 181 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
181ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று
மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10
அக்காக்காய்,Akkakkai - காக்கையே!
நம்பிக்கு கோல் கொண்டுவா என்று,Nambikku Kol Kondu Va Endru - உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று
மிக்கான் உரைத்த சொல்,Mikkaan Uraiththa Sol - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லி புத்தூர் பட்டன்,Villi Puththoor Pattam - ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்,Okka Uraiththa Tamil Paththum Vallavar - அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்,Makkalai Pettru I Vayaththae Magizhvar - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர்