Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 202 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
202ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு அதனோசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-1
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
விழுங்கி,Vizhunki - (நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை,Verung Kalathai - (பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு,Verpidai Ittu - கல்லிலே பொகட்டு
அதன் ஓசை,Adhan Osai - அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்,Ketkum - கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்,Kanna Piraan - ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற,Katra - படித்துள்ள
கல்வி தன்னை,Kalvi Thannai - (தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்,Kaakka Killom - (எங்களால்) காக்க முடியாது;
உன் மகனை,Un Mahanai - (ஆகையால்) உன் பிள்ளையை
காவாய்,Kaavai - (தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்,Punnil - புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்,Puli Peithal Okkum - புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை,Theemai Ivai - இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை,Purai Purai - வீடு தோறும்
செய்ய வல்ல,Seyya Valla - செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்,Annal Kannan - ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை,Or Mahanai - ஒரு புத்திரனை
பெற்ற,Petra - பெற்ற
அசோதை நங்காய்,Asothai Nangai - யசோதைப் பிராட்டி;
உன் மகனை,Un Mahanai - உன் பிள்ளையை
கூவாய்,Koovai - அழைத்துக் கொள்வாயாக.