திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 203 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
203பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2
பதவுரை Show / Hide
இங்கே,Enge - இவ்விடத்திலே
வருக வருக வருக,Varuga Varuga Varuga - சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;,Vamana Nambi Inge Varuga - வாமன நம்பீ! இவ்விடத்திலே வருவாயாக;
கரிய குழல்,Kariya Kuzhal - கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்,Seyya Vaai - செந் நிறமான வாயையும்
முகத்து,Mugaththu - (ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ,Kaaguththa Nambi - இராம மூர்த்தி!
இங்கே வருக-;,Inge Varuga - இவ்விடத்திலே வருவாயாக
நங்காய்,Nangai - (என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை) குண பூர்ணை யானவளே!
இவன்,Ivan - இந்தப் பிள்ளை
எனக்கு,Enakku - எனக்கு
இன்று,Indru - இப்போது
அரியன்,Ariyan - அருமையானவனாயிற்றே;
அஞ்சனம்,Anjanam - (என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி) மை போன்ற
வண்ணா,Vanna - வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்,Asal Agaththar - அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச,Paripavam Pes - (உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்,Tharikka Killen - பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு,Paaviyeenukku - (இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
இங்கே போதராய்,Inge Potharai - (இவ் வருத்தந் தீர) இங்கே வாராய் (என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)