Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 206 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
206ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளை யாள் என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி யனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-5
ஆலை கரும்பு அனைய,Aalai Karumbu Anaiya - ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி,En Mozhi - மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்,Asethai Nallai - யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்,Pal Valaiyaal - பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகன்,En Mahan - என் மகனானவன்
பாலை கறந்து,Paalai Karandhu - பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
அடுப்பு ஏற வைத்து,Aduppu Era Vaithu - (அப் பாத்திரங்களை) அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப,Irubba - (அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி,Neruppu Vendi - (அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று,Melai Agaththe Sendru - மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே,Ange - அவ் விடத்தில்
இறைப் பொழுது,Iraip Pozhuthu - க்ஷண காலம்
பேசி நின்றேன்,Pesinindren - (அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய,Saalagrama Udaiya - ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி,Nambi - ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
சாய்த்து,Saithu - (என் மகளிருந்த விடத்திற் சென்று) (அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு,Parugittu - (அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து,Ponthu - (இப் புறத்தே) வந்து
நின்றான்,Nindran - (ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
உன் மகனை,Un Mahanai - (இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக) உன் பிள்ளையான இவனை
கடவாய்,Kadavai - அழைத்துக் கொள்ள வேணும்.