Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 207 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
207ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன்
கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6
கோதுகலம் உடை,Kothukalam Udai - (எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே,O Kuttane - வாராய் பிள்ளாய்!
குன்று,Kundru - (கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்,Eduththai - (குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா,Kudam Aadu Kooththa - குடக் கூத்தாடினவனே!
வேதம்,Vedam - வேதங்களுக்கு
பொருளே,Porule - பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா,En Vengadavaa - ‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே,Viththagane - வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே,Inge - என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்,Pothar Kandai Pothar Kandai - விரைந்து ஓடிவா;
போதரேன் என்னாதே,Potharen Ennaathe - (என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன; )‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்,Pothar Kandai - (இசைந்து) வருவாயாக;
அசல் அகத்தார்,Asal Agaththar - (என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன ) அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்,Ethenum - இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி,Solli - (உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
ஏதேனும்,Ethenum - (அவ்வளவோடும் நில்லாமல்) (என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச,Pesa - (என் பக்கலிலே வந்து) சொல்ல
நான்,Naan - (அவற்றை) (உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்,Ketka Matten - கேட்டுப் பொறுக்க மாட்டேன்
இங்கே போதராய்,Enge Potharai - (ஆதலால், அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)