| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 208 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக் காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன் இன்ன முகப்பன் நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-7 | அசோதை நங்காய்!,Asothai Nangai - அசோதை நங்காய்! செந்நெல் அரிசி,Sennel Arisi - செந்நெல் லரிசியும் சிறு பருப்பு,Siru Paruppu - சிறு பயற்றம் பருப்பும் செய்த,Seidha - (சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த அக்காரம்,Akkaram - கருப்புக் கட்டியும் நறு நெய்,Naru Nei - மணம் மிக்க நெய்யும் பாலால்,Paalaal - பாலும் ஆகிற இவற்றாலே பன்னிரண்டு திரு ஓணம்,Pannirandu Thiru Onam - பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும் அட்டேன்,Atten - (நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை) சமைத்தேன்; பண்டும்,Pandum - முன்பும் இப் பிள்ளை,E Pillai - இப் பிள்ளையினுடைய பரிசு,Parisu - ஸ்வபாவத்தை அறிவன்,Arivan - (நான்) அறிவேன்; எல்லாம்,Ellaam - (இப்போதும் அப்படியே திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம் விழுங்கிட்டு,Vizhungittu - (ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி,Naan Innam Ugappan Endru Solli - (அவ்வளவிலும் திருப்தி பெறாமல்) ‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு போந்த,Ponthu - (அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து நின்றான்,Nindran - (அந்ய பரரைப் போல) நில்லாநின்றான்; உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இனி இவ்வாறு தீமை செய்யாதபடி) உன் பிள்ளையான இக் கண்ணனை கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - (உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக; இவையும்,Ivaiyum - (பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்) இப்படி வளர்ப்பதும் சிலவே,Silave - சில பிள்ளை வளர்க்கையோ? |