| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 209 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8 | கேசவனே,Kesavane - அழகிய குழலை யுடையவனே! இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வருவாயாக; கில்லேன் என்னாது,Killeen Ennadhu - ‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல் இங்கே போதராய்;,Inge Potharai - இங்கே வருவாயாக, என்று யசோதை யழைக்க (இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,) நீ,Nee - நீ நேசம் இலாதார்,Nesam Ilaathaar - (உன்மீது) அன்பில்லாதவர்களுடைய அகத்து இருந்து,Agaththu Irundhu - அகங்களிலே யிருந்து விளையாடாதே,Vilayaadaadhe - விளையாட்டொழிவது மன்றி, தூசனம் சொல்லும்,Thooshanam Sollum - (உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற தொழுத்தைமாரும்,Thozhuththaimarum - (இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும் தொண்டரும்,Thondarum - (இடையர்க்கு) அடியரானவர்களும் நின்ற,Nindra - நிற்கின்ற இடத்தில் நின்று,Idaththil Nindru - இடங்களையு மொழித்து விட்டு போதராய்,Potharai - (இங்கே) வாராய்; தாய் சொல்லு,Thaai Sollu - (என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,) தாய் வாய்ச் சொல்லை கொள்வது,Kolvadhu - மேற் கொண்டு நடப்பது தன்மம் கண்டாய்,Thanmam Kandai - (பிள்ளைகளுக்கு) தர்மங்காண்; தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.),Thaamodharaa Inge Potharai - (ஆதலால்) தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.) |