திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2092 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2092முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனானவனை ஒழிய நான் மற்று எங்கேனும் போகிலும் -என்னுடைய இந்த்ரியங்கள் ஆனவை அவனை ஒழிய வேறு சிலரை ஸ்தோத்ரம் பண்ணாது -என்கிறார் அவன் ஜகத் ரஷணத்தில் நின்றும் மீளாதாப் போலே இவருடைய இந்த்ரியங்களும் அவனை விட்டு மீளா – அல்லாதார்க்கு அவன் பக்கலிலே இந்த்ரியங்களை மூட்டுகைக்கு உள்ள அருமை போரும் இவர்க்கு அகற்றுகைக்கு 11
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ் சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால் காணாக் கண் கேளா செவி
பதவுரை Show / Hide
வாய், Vaai - எனது வாயானது
அவனை அல்லது, அவனை அல்லது - ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது, வாழ்த்தாது - (மற்றொன்றைப்) புகழாது;
கை தாம், கை தாம் - கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா, உலகம் தாயவனை அல்லது தொழா - உலகங்களைத்தாவியளந்துகொண்ட திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழமாட்டா;
பேய் முலை நஞ்சு, பேய் முலை நஞ்சு - பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக, ஊண் ஆக - உணவாக
உண்டான், உண்டான் - அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால், உருவொடு பேர் அல்லால் - திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா, கண் கணா செவி கேளா - கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்கமாட்டா.