திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2093 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் – இங்கு ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம் இன்னது என்று பக்தியை விதிக்கிறார் 12 | செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு | பதவுரை Show / Hideஏனம் ஆய் நின்றாற்கு, ஏனம் ஆய் நின்றாற்கு - வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும், செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் - (இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,) செவிதொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும் செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும், செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் - தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும் அவியாத ஞானமும், அவியாத ஞானமும் - (இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும் வேள்வியும், வேள்வியும் - அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும் நல் அறமும், நல் அறமும் - (நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும் இயல்வு என்பரே, இயல்வு என்பரே - ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு) |