திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2095 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2095முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் முற்பாடனுமாய் ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு போரா நின்றார்களே என்னில் அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார் 14
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த மூர்த்தி யுருவே முதல்
பதவுரை Show / Hide
அவர் அவர், அவர் அவர் - ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி, தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி - (தங்களுடைய ரஜஸ்தமோ குணங்களுக்குத்தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று, இவர் இவர் எம்பெருமான் என்று - தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும், சுவர்மிசை சார்த்தியும் - சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும், வைத்தும் - பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர், தொழுவர் - தொழுகின்றார்கள்;
உலகு அளந்த மூர்த்தி, உலகு அளந்த மூர்த்தி - (எவர் என்ன செய்தாலும்) (எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே, உருவே - திருமேனியொன்றே
முதல், முதல் - முக்கியமானது