திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2095 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் முற்பாடனுமாய் ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு போரா நின்றார்களே என்னில் அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார் 14 | அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் | பதவுரை Show / Hideஅவர் அவர், அவர் அவர் - ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள் தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி, தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி - (தங்களுடைய ரஜஸ்தமோ குணங்களுக்குத்தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து இவர் இவர் எம்பெருமான் என்று, இவர் இவர் எம்பெருமான் என்று - தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு சுவர்மிசை சார்த்தியும், சுவர்மிசை சார்த்தியும் - சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும் வைத்தும், வைத்தும் - பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும் தொழுவர், தொழுவர் - தொழுகின்றார்கள்; உலகு அளந்த மூர்த்தி, உலகு அளந்த மூர்த்தி - (எவர் என்ன செய்தாலும்) (எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய உருவே, உருவே - திருமேனியொன்றே முதல், முதல் - முக்கியமானது |