திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2096 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2096முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் – நாட்டிலே சிலரைச் சிலர் ஆஸ்ரயிக்கையும் அவர்கள் அவர்களுக்குப் பல பிரதானம் பண்ணுகையுமாய் அன்றோ இருக்கிறது -என்ன அவர்கள் அங்கனே செய்தார்களே யாகிலும் அவை யடங்க வ்யர்த்தம் -என்கிறா 15
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது
பதவுரை Show / Hide
மூவரே, மூவரே - (உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்) ஸ்ருஷ்டிஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார், முதல் ஆவார் - முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும், அம்மூவர் உள்ளும் - அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன், மூரி நீர் வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான், முதல் ஆவான் - தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய, முதல் ஆய - உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான், நல்லான் - நற்குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால், அருள் அல்லால் - கிருபையானது நன்மையை விளைக்குமேயொழிய
நாமம்நீர் வையகத்து, நாமம்நீர் வையகத்து - கடல்சூழ்ந்த இப்பூமியில்
பல்லார், பல்லார் - அத்திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும், அருளும் - தயையும்
பழுது, பழுது - பயனற்றதாம்