திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2099 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2099முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் – திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல் செய்து நான் இழந்தேனோ – அதுக்கும் இவ்வருகே போந்து கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது என்கிறார் – வரையாதே தீண்டிப் பரிமாறுகையும் அழகும் ஐஸ்வர்யமும் பஷபாதமும் உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் 18
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால்
பதவுரை Show / Hide
நான்ற முலைத் தலை, நான்ற முலைத் தலை - (பேய்ச்சியான பூதனையினுடைய) சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு, Nanju - விஷத்தை
உண்டி, உண்டி - (அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி, உறி - உறிகளிலே வைத்த
வெண்ணெய், Vennai - வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற, தோன்ற - இச்செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான், உண்டான் - அமுது செய்தவனாகி
வென்றி, Vendri - ஜயத்தையுடைய
சூழ், Sool - எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக்கொள்ளவல்ல
களிற்றை, களிற்றை - (கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது, ஊன்றி பொருது - எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும், உடைவு கண்டாலும் - அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும், புள் வாய் கீண்டானும் - பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய், மருது இடை போய் - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த, மண் அளந்த - உலகங்களை அளந்து கொண்டவனான
மால், Maal - எம்பெருமானேயாவன்.