| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 21 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து – திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை – அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்) 9 | கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9 | நங்காய்,Nangai - பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்) கிடக்கில்,Kidakkil - (தொட்டிலில்) கிடந்தானாகில் தொட்டில்,Thottil - தொட்டிலானது கிழிய,Kizhiya - சிதிலமாம்படி உதைத்திடும்,Udhaithidum - (கால்களினால்) உதையா நின்றான் எடுத்துக் கொள்ளில்,Eduththu kollil - (இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால் மருங்கை,Marungai - இடுப்பை இறுத்திடும்,Eruthidum - முறியா நின்றான். ஒடுக்கி,Oduki - (இவனுடைய கைகால்களை) ஒடுக்கி புல்கில்,Pulgil - மார்வில் அணைத்துக் கொண்டால் உதரத்து,Udharaththu - வயிற்றிலே பாய்ந்திடும்,Paayndhidum - பாயாநின்றான் மிடுக்கு,Midukku - (இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி இலாமையால்,Ilaamaiyaal - (இப்பிள்ளைக்கு) இல்லாமையால் நான்,Naan - தாயாகிய நான் மெலிந்தேன்,Melindhen - மிகவும் இளைத்தேன். |