| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 210 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | கன்ன லிலட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு என்னக மென்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான் உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-9 | அசோதை நங்காய்,Asothai Nangai - அசோதை நங்காய் கன்னல்,Kannal - கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த இலட்டுவத்தோடு,Elattuvathodu - லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு சீடை,Seedai - சீடையும் கார் எள்ளின் உண்டை,Kaar Ellin Undai - எள்ளுண்டையையும் கலத்தில்,Kalaththil - அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே இட்டு,Ettu - நிரைத்து என் அகம் என்று,En Agam Endru - என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல் வைத்து,Vaithu - உறிகளிலே வைத்து விட்டு நான் போந்தேன்,Naan Ponthen - நான் வெளியே வந்தேன் இவன்,Evan - (அவ்வளவில்) இப் பிள்ளையானவன் புக்கு,Pukku - அவ் விடத்திலே வந்து புகுந்து அவற்றை,Avatrai - அப் பணியாரங்களை பெறுத்தி,Peruththi - நான் பெறும்படி பண்ணி போந்தான்,Ponthaan - ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான் பின்னும்,Pinnum - (அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் ) மறுபடியும் அகம் புக்கு,Agam Pukku - என் வீட்டினுள் புகுந்து உறியை நோக்கி,Uriyai Nokki - உறியைப் பார்த்து அதில் பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்,Pirangu Oli Vennaiyum Sodhikkindran - மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான் உன் மகன் தன்னை,Un Mahan Thannai - (இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்) உன் பிள்ளையாகிய கண்ணனை கூவிக் கொள்ளாய்,Koovik Kollai - உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள் இவையும்,Ivaiyum - இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும் சிலவே,Silave - ஒரு பிள்ளை வளர்க்கையோ |