திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2100 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2100முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஒரு நாள் வந்து கிட்டுன விடத்திலும் நான் அவனைப் பெற்றிலேன் அவன் தானே வந்து சாய என்றும் அனுபவிக்கப் பெற்ற நீ என்ன பாக்யத்தைப் பண்ணினாயோ -என்கிறார் – பூமியைப் போலே ஒருகால் அன்றியிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் 19
மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண் டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
பதவுரை Show / Hide
வையகம், வையகம் - இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை, ஆலின் இலை - ஆலந்தளிரிலே
துயின்ற, துயின்ற - சயனித்துக் கொண்டவனும்
ஆழியான், ஆழியான் - திருவாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி, கோலம் கரு மேனி - அழகிய கறுத்த திருமேனியையுடையவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனுமான
மால், Maal - எம்பெருமான்
கண்படையுள், கண்படையுள் - உறங்குகையில்
என்றும், Endrum - எப்போதும்
திருமேனி, Thirumeeni - அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று, தீண்ட பெற்று - ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும், மாலும் - (அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற
கரு கடலே, கரு கடலே - கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய், நீ என் நோற்றாய் - (இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?