திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2102 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஐஸ்வர்யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித சம்ஸ்லேஷைக ஸ்வபாவன் கிடீர் -என்கிறார் – அங்கன் அன்றிக்கே பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார் 21 | நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி | பதவுரை Show / Hideசென்று நின்று, சென்று நின்று - (மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையினால் நிலம் நீரேற்று, நிலம் நீரேற்று - பூமிதானம்வாங்கி மூ அடியால், மூ அடியால் - மூன்றடிகளாலே திசை அளந்த, திசை அளந்த - எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட செம்கண்மாற்கு, செம்கண்மாற்கு - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு என்றும், Endrum - எப்போதும் ஆழி, Aazhi - சக்கரமானது படை, படை - ஆயுதமாயிருக்கும்; புள், புள் - கருடன் ஊர்தி, ஊர்தி - வாஹனமா யிருப்பன்; ஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே! அறி, அறி - நான் சொல்வதை ஆராய்ந்துகொள்; பாம்பு அணையான் பாதம் அடை, பாம்பு அணையான் பாதம் அடை - சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு. |