திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2102 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2102முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஐஸ்வர்யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித சம்ஸ்லேஷைக ஸ்வபாவன் கிடீர் -என்கிறார் – அங்கன் அன்றிக்கே பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார் 21
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும் படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி
பதவுரை Show / Hide
சென்று நின்று, சென்று நின்று - (மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று
அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று, நிலம் நீரேற்று - பூமிதானம்வாங்கி
மூ அடியால், மூ அடியால் - மூன்றடிகளாலே
திசை அளந்த, திசை அளந்த - எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட
செம்கண்மாற்கு, செம்கண்மாற்கு - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும், Endrum - எப்போதும்
ஆழி, Aazhi - சக்கரமானது
படை, படை - ஆயுதமாயிருக்கும்;
புள், புள் - கருடன்
ஊர்தி, ஊர்தி - வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே!
அறி, அறி - நான் சொல்வதை ஆராய்ந்துகொள்;
பாம்பு அணையான் பாதம் அடை, பாம்பு அணையான் பாதம் அடை - சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.