திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2105 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2105முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி இங்கனே இருக்கிற நாம் ஒன்றை வேண்டி அது பெறாமையாலே களவு காணப் புக்கு கட்டுண்டோமாக வேணுமோ -என்ன கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் 24
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை
பதவுரை Show / Hide
ஓங்கு ஓதம் வண்ணா, ஓங்கு ஓதம் வண்ணா - ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவையுடையவனே!
விரலோடு வாய் தோய்ந்த, விரலோடு வாய் தோய்ந்த - (நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது) உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
கண்டு, கண்டு - பார்த்து
உரலோடு உற பிணித்த நான்று, உரலோடு உற பிணித்த நான்று - (உன்னைத் தண்டிக்கவேண்டி) உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தபோது
குரல் ஓவாது, குரல் ஓவாது - நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி, ஏங்கி - ஏங்கிக்கொண்டு
நினைந்து, நினைந்து - (அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக்கொண்டு
அயலார் காண, அயலார் காண - அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே, இருந்திலையே - இருந்தாயல்லவோ?
உரை, உரை - உண்மையாகச் சொல்லு.