திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2106 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2106முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார் ஓவாதே ஏத்தவும் தொடங்கினார் அவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயிலே ஆனாப் போலே ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி 25
உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும் வரை மேல் மரகதமே போலே திரை மேல் கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி எழும்
பதவுரை Show / Hide
வரை மேல், வரை மேல் - ஒரு மலையின்மேலே
மரகதமே போல, மரகதமே போல - மரகதப்பச்சை படிந்தாற்போல
திரை மேல், திரை மேல் - திருப்பாற்கடலிலே
கிடந்தானை, கிடந்தானை - சயனித்திருப்பவனும்
கீண்டானை, கீண்டானை - இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய், Kezhal Aay - வராஹமூர்த்தியாகி
பூமி இடந்தானை, பூமி இடந்தானை - பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம், என் உள்ளம் - எனது மனமானது
உரை மேற்கொண்டு, உரை மேற்கொண்டு - உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும், ஓவாது எப்போதும் - இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி, Aethi - அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும், எழும் - உஜ்ஜீவிக்கும்.