திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2108 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2108முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக திருமலையிலே வந்து நிற்கிற படியை அனுசந்தித்தார் அந்த நிலை தன்னையே கொண்டு இவனுடைய கைகள் ஆனவை உகவாதார் மண் உண்ணும்படி வளர்ந்தவை என்று கொண்டு நிச்சயிக்கலாம் படி நின்றது என்கிறார் 27
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் கார்க்கோடு பற்றியான் கை
பதவுரை Show / Hide
மலையால், மலையால் - கோவர்த்தன கிரியைக்கொண்டு
குடை கவித்து, குடை கவித்து - குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து, மா வாய் பிளந்து - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும்,
சிலையால், சிலையால் - வில்லைக்கொண்டு
மராமரம் ஏழ் செற்று, மராமரம் ஏழ் செற்று - ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும்,
கொலை யானை, கொலை யானை - (இச்செயல்களோடு நிற்காமல்) கொலைசெய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு, போர் கோடு - சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும், ஒசித்தனவும் - பிடுங்கினவையும்.
பூ குருந்தம், பூ குருந்தம் - பூ வோடுகூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும், சாய்த்தனவும் - வேரோடே பறித்துத் தள்ளினவையும் (எவையென்றால்)
கார், கார் - (கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தையொத்த
கோடு, Kodu - சங்கை
பற்றியான், பற்றியான் - ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய
கை, Kai - திருக்கைகளேயாகும்.