| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 211 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10 | நங்காய்,Nangai - யசோதைப் பிராட்டி சொல்லில்,Sollil - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால் அரசிப்படுதி,Arasippaduthi - அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய் (அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்; இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.) உன் பிள்ளை தான்,Un Pillai Thaan - உன் பிள்ளையோ என்றால் சூழல் உடையனே,Soozhal Udaiyane - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே (என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க) இல்லம் புகுந்து,EIlam Pugundhu - என் வீட்டினுள் புகுந்து என் மகளை,En Magalai - என் பெண்ணை கூவி,Koovi - பேர் சொல்லி அழைத்து கையில் வளையை,Kaiyil Valaiyai - அவளுடைய கையிலிருந்த வளையை கழற்றிக் கொண்டு,Kazhaththi Kondu - பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய் கொல்லையில் நின்றும்,Kollayil Nindrum - காடுகளில் நின்றும் நாவற்பழங்கள்,Naavar Pazhangal - நாவற்பழங்களை கொணர்ந்து,Konarndhu - இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து அங்கு,Angu - அவ் விடத்தில் விற்ற,Vitra - அவற்றை விற்பனை செய்யலுற்ற ஒருத்திக்கு,Oruththikku - ஒரு பெண் பிள்ளைக்கு அவ்வளை,Avvalai - அந்த என் மகளுடைய கை வளையை கொடுத்து,Koduthu - கொடுத்து நல்லன,Nallana - (அதற்குப் பதிலாக) (தனக்கு) நல்லவையாகத் தோற்றின நாவல் பழங்கள்,Naaval Pazhangal - நாவற் பழங்களை கொண்டு,Kondu - அவளிடத்தில் வாங்கிக் கொண்டு நான் அல்லேன் என்று,Naan Allaen Endru - (போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு, நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே) (உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி சிரிக்கின்றான்,Sirikkindran - (அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு) ஓ! மோசம் போனோமே என்று சிரியா நின்றான்.(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்) |