திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2110 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2110முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான் என்று பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் 29
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
பதவுரை Show / Hide
இறையும், இறையும் - ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான், நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான் - பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின், பிறை மருப்பின் - பிறைபோன்ற தந்தத்தையுடையதும்
பைங்கண், பைங்கண் - பசுமைதங்கிய கண்களையுடையதுமான
மால் யானை, மால் யானை - பெரியகஜேந்திரனை
படு துயரம், படு துயரம் - (முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த, காத்து அளித்த - ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய், செம் கண் மால் கண்டாய் - புண்டரீகாக்ஷனான பெருமான்காண்;
தெளி, தெளி - [நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.