திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2112 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2112முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய வ்யதிரிக்த விஷயங்களை ஷண காலமும் ஸ்மரிக்கல் ஆகாது கிடீர்–என்கிறார் அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால் வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் 31
புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி அரி யுருவும் ஆளுருவுமாகி எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை
பதவுரை Show / Hide
ஒரு கை புரி பற்றி, ஒரு கை புரி பற்றி - ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
ஓர் பொன் ஆழி ஏந்தி, ஓர் பொன் ஆழி ஏந்தி - (மற்றொரு திருக்கையிலே) ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம், ஆள் உருவம் அரி உருவம் - நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான், எரி உருவம் வண்ணத்தான் - அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தையுடையனான இரணியனுடைய
மார்பு, Maarbu - மார்பை
இடந்த, இடந்த - நகத்தால் குத்திப்பிளந்து போட்ட
மால், Maal - திருமாலினுடைய
அடியை அல்லால், அடியை அல்லால் - திருவடிகளைத்தவிர
மற்று, Mattru - வேறொரு விஷயத்தை
இமை, Imai - க்ஷணகாலமேனும்
எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]