திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2112 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய வ்யதிரிக்த விஷயங்களை ஷண காலமும் ஸ்மரிக்கல் ஆகாது கிடீர்–என்கிறார் அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால் வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் 31 | புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரி யுருவும் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை | பதவுரை Show / Hideஒரு கை புரி பற்றி, ஒரு கை புரி பற்றி - ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி ஓர் பொன் ஆழி ஏந்தி, ஓர் பொன் ஆழி ஏந்தி - (மற்றொரு திருக்கையிலே) ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி ஆள் உருவம் அரி உருவம், ஆள் உருவம் அரி உருவம் - நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு எரி உருவம் வண்ணத்தான், எரி உருவம் வண்ணத்தான் - அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தையுடையனான இரணியனுடைய மார்பு, Maarbu - மார்பை இடந்த, இடந்த - நகத்தால் குத்திப்பிளந்து போட்ட மால், Maal - திருமாலினுடைய அடியை அல்லால், அடியை அல்லால் - திருவடிகளைத்தவிர மற்று, Mattru - வேறொரு விஷயத்தை இமை, Imai - க்ஷணகாலமேனும் எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.] |