திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2116 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2116முதல் திருவந்தாதி || யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது – அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் 35
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி, நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து முடியான் படைத்த முரண்?
பதவுரை Show / Hide
ஆறிய அன்பு இல், ஆறிய அன்பு இல் - நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார், அடியார் - சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால், தம் ஆர்வத்தால் - தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய, கூறிய - சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ, குற்றம் ஆ - குற்றமாக
நீ கொள்ளல், நீ கொள்ளல் - நீ கொள்ளாதே;
ஈர் ஐந்து முடியான், ஈர் ஐந்து முடியான் - (அது ஏனெனில்) பத்துத்தலைகளையுடையனானராவணன்.
படைத்த, படைத்த - புத்திபூர்வகமாகப் பண்ணின
முரண், முரண் - தப்புக்காரியமானது
நெடியோய், நெடியோய் - பெருமை பொருந்திய உன்னுடைய
அடி, Adi - திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே, தேறி அடைதற்கு அன்றே - தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?