திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2119 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2119முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தேசத்தை உகந்த படியைக் கண்டு இவரும் அங்கு உள்ள பதார்த்தங்களை உகக்கப் புக்கார் – ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே – பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே- 38
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை, பேர எறிந்த பெருமணியை, – காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர் என்னென்ற மால திடம்.
பதவுரை Show / Hide
ஊரும், Oorum - திரிகின்ற
வரி அரவம், Vari Aravam - (உடம்பில்) கோடுகளையுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர், On Kuravar - அழகிய குறவர்கள்
மால் யானை பேர, Maal Yaanai Pera - (பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த, Erintha - (அவ்யானைகளின்மேல்) வீசியெறிந்த
பெரு மணியை, Peru Maniyai - பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று, Kaar Udaya Min Endru - மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம், Putru Adayum Vengadam - புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர், Mela Surar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகள்
எம் என்னும் மாலது, Em Ennum Maalathu - ‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும்படியாகவுள்ள எம்பெருமானது
இடம், Idam - திவ்யதேசமாம்.