திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2120 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவனது அல்லாத தேசம் உண்டோ – அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணாத வியாபாரம் உண்டோ ஆன பின்பு இங்குத்தைக்கு இத்தனை விசேஷம் என்னென்ன அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே இவ் விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் – என்கிறார் – 39 | இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது. | பதவுரை Show / Hideபேர் ஓதம் வண்ணர், Per Ootham Vannaar - பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான் முன், Mun - முற்காலத்தில் இடந்தது, Idanthu - (மஹாவராஹமாகிக்) கோட்டார்குத்தி யெடுத்தது பூமி, Bhoomi - பூமியாம்; எடுத்தது, Eduthathu - குடையாக வெடுத்துப் பிடித்தது குன்றம், Kundram - கோவர்த்தனமலையாம் அஞ்ச கடந்தது, Anja Kadandhu - அஞ்சி முடிந்துபோம்படி செய்தது கஞ்சனை, Kanjanai - கம்ஸனையாம்; கிடந்ததுவும், Kidandhathuvum - திருக்கண் வளர்ந்தருளினது ஓதம் நீர் மாகடல், Otham Neer Magadal - பெருவெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம் பெரிது நின்றதும், Peridhu Nindrathum - பெருமையெல்லாம் தோற்றநின்றது வேங்கடம், Vengadam - திருமலையிலாம். |