திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2121 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2121முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இங்குற்றை நித்ய வாசம் தனக்கு அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி யுகக்குமத்தை கிடீர் – என்கிறார் – 40
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர் கோன்வீழ கண்டுகந்தான் குன்று.
பதவுரை Show / Hide
பெருவில், Peruvil - பெரிய வில்லையும்
பகழி, Pagazhi - அம்புகளை முடையரான
குறவர், Kuravar - குறவர்களினுடைய
கை, Kai - கையிற்பிடித்திருந்த
செம் தீ, Sem Thee - சிவந்த நெருப்புக்கு
வெருவி, Veruvi - பயப்பட்டு
புனம் துறந்த, Punam Thurandha - கொல்லையை விட்டு நீங்கின
வேழம், Vezham - யானையானது,
இரு விசிம்பில், Iru Visimbil - பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ, Meen Veezha - நக்ஷத்திரம் விழ
கண்டு, Kandu - அதனைப்பார்த்து (நாம் அப்பால் போகமுடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும், Anjum - பயப்படுமிடமான
வேங்கடம், Vengadam - திருவேங்கடமானது
மேல், Mel - முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு, Asurar Kon Veezha Kandu - இரணியாசுரனை முடித்து
உகந்தான், Uganthaan - ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று, Kunru - திருமலையாம்