திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2122 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட பந்தம் உண்டே யாகிலும் அவன் விரோதி நிரசன சீலனாகிலும் குற்றவாளரான நமக்கு அவன் பாடு செல்ல ஒண்ணுமோ -என்ன அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் – நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை – இனி நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – 41 | குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenje - எனது மனமே! என்றும், Endrum - எப்போதும் புறன் உரையே ஆயினும், Puran Uraiye Aayinum - (உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் பொன் ஆழி கையான் திறன் உரையே, Pon Aazhi Kaiyaan Thiran Uraiye - சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே சிந்தித்து இரு, Sindhithu Iru - அநுஸந்தித்துக் கொண்டிரு; இன்று முதலாக, Indru Mudhalaga - (அப்படியிருந்தால்) இன்று தொடங்கி குன்று அனைய குற்றம் செய்யினும், Kunru Anaiya Kuttram Seyyinum - மலைபோல் (பெருப்பெருத்த குற்றங்களைச் செய்தாலும் குணம் கொள்ளும், Gunam Kollum - (அவற்றையெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன் |