திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2127 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவர்களுக்குத் தான் முற்கோலி நின்று ஹித பரனாகை அன்றிக்கே இவர்கள் தாங்கள் உகந்தபடி கடக்கப் போய் அனர்த்தங்களைச் சூழ்த்துக் கொண்டு நிற்கும் அன்றும் பாபத்தைப் போக்கி ரஷிப்பான் அவன் கிடீர் – என்கிறார் – கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று – இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது – 46 | பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரிநூல் மார்பன் வினைதீர, – புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார். | பதவுரை Show / Hideபண் புரிந்த நான்மறை யோன், Pan Purintha Nanmarai Yon - ஸ்வரங்களோடு கூடின நால் வேதஙளை நிரூபமாக வுடையனான பிரமனுடைய சென்னி, Sennai - தலையில் பலி ஏற்ற, Pali Aetra - [கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்தில்] பிச்சை யெடுத்துத்திரிந்தவனும் வெண் புரி நூல் மார்பன், Ven Puri Nool Marban - வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய வினை, Vinai - ப்ரஹ்மஹத்தி பாபமானது தீர, Theera - நீங்கும்படியாக புண் புரிந்த ஆகத்தான், Pun Purintha Agaththan - [ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக] தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய தாள், Thaal - திருவடிகளை பணிவார், Panivaar - ஆச்ரயிக்குமவர்கள் அமரர்தம் போகத்தால், Amarartham Pogaththal - நித்யஸூரிகளின் போகமாகிய பரமபதாநு பவத்தோடு பூமி, Bhoomi - இந்தலீலா விபூதியை ஆள்வார், Aalvaar - ஆட்சிபுரிவர்கள். |