திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2128 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2128முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது என்கிறார் – 47
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள் கைந்நாகம் காத்தான் கழல்.
பதவுரை Show / Hide
மதம் களிறு ஐந்தைனையும், Madhama Kaliru Aindhainaiyum - மதம்பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி, Vaari Surukki - ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப்பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ, Seyri Thiriyamal Sem Nireei - கண்டவிடங்களிலும் திரியவொட்டாமல் செவ்வையாக நிலைநிறுத்தி
கூரிய, Kooriya - மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால், Mei Gnanaththal - உண்மையான பக்தி ரூபா பந்நஜ்ஞானத்தாலே
உணர்வார், Unarvaar - (அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான், Kai Naagam Kaaththaan - கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.