திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2130 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2130முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) எல்லாம் செய்தாலும் இவ்வருகு உண்டான பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது என்கிறார் – 49
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை, நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம் ஆதிகாண் பார்க்கு மரிது.
பதவுரை Show / Hide
மகிழ் அலகு ஒன்றே போல், Magizh Alagu Ondre Pol - (கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே காணிஸ்தாநத்திலும் கோடிஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பதுபோல
மாறும் பல் யாக்கை, Maarum Pal Yaakkai - மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ, Negizhal - தன்னடையேவிட்டு நீங்கும்படியாக
முயலகிற்பார்க்கு அல்லால், Muyalakirparkku Allaal - முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும், Aarkkum - மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு, Mugizh Virindha Sothipol Thondrum Sudar Pon Nedumudi Em Aadhi Kaanbu - விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல் தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது, Aridhu - கூடாதகாரியம்.