திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2133 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2133முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஏன் தான் -இவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்கை யரிதோ-என்னில் நாட்டில் துர்மாநிகளாய் அதிகாரிகளாய்த் திரிகிறவர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள் நிர்வஹித்துக் கொள்ளுகிறது அவனை ஆஸ்ரயித்துக் காண் என்கிறார்  – 52
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர், வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று.
பதவுரை Show / Hide
எண்மர், Enmar - அஷ்ட வஸுக்களும்
பதினொருவர், Pathinoruvar - ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர், Eer Aruvar - த்வாத சாதித்யர்களும்
ஓர் இருவர், Oru Irugar - இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
வைகலும், Vaikalum - (ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்) நாள்தோறும்
வண்ணம் மலர் ஏந்தி, Vannam Malar Aendhi - நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு
நண்ணி, Nanni - (எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால், Oru Maalaiyal - ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது, Ovaadhu - இடைவிடாமல்
எப்போதும், Eppodhum - எல்லா வேலைகளிலும்
பரவி, Paravi - துதிசெய்து
திருமாலை சென்று, Thirumalai Sendru - திருமகள் கொழுநனைக்கிட்டி
கைதொழுவர், Kaithozhuvar - வணங்குவர்கள்