திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2134 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2134முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கார்ய காலத்திலே வந்து – பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே – கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள் அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது – எல்லா நேர்த்தியும் நேர்ந்து – தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ் இதில் தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது – 53
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும் புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம், திருமாற் கரவு.
பதவுரை Show / Hide
திரு மாற்கு, Thiru Maarku - பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு, Aravu - திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம், Sendraal Kudai Aam - (அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால், Irundhaal - எழுந்தருளியிருந்தால்
சிங்காசனம் ஆம், Singaasanam Aam - (அப்போது) ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால், Nindraal - நின்று கொண்டிருந்தால்
மரவடி ஆம், Maravadi Aam - (அப்போது) பாதுகையாவன்;
நீள் கடலுள், Neel Kadalul - பாம்பினையுடலிலே (சயனிக்கும்போது)
என்றும், Endrum - எப்போதும்
புணை ஆம், Punar Aam - திருப்பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம், Ani Vilakku Aam - மங்கள தீபமாவன்;
பும்பட்டு ஆம், Pumbattu Aam - அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம், Pulgum Anai Aam - தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன்.