திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2137 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2137முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பேராயர்க்கு ஆட்படுகை யாவது அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது சர்வேஸ்வரன் உடைய பிரபாவம் ஒருவரால் பரிச்சேதிக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56
பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை, ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் அடிக்கமலந் தன்னை அயன்.
பதவுரை Show / Hide
பேரே, Perae - [நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது] எம்பெம்மானது திருநாமமாகவே
வர, Var - வரும்படியாக
பிதற்றல் அல்லால், Pithatral Allal - பிதற்றுவதைத்தவிர
எம்பெம்மானை, Embemmanai - [அந்த] எம்பெருமானை
ஆரே, Aare - ஆர்தான்
அறிவார், Arivaar - (உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க, Adhu Nirka - அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன், Ayan - பிரமனானவன் .
கடி, Kadi - பரிமளம் மிகுந்த
கமலத்துள், Kamalaththul - (அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும், Nere Irundhum - (அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக்கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை, Kannaan Adi Kamalam Thannai - அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான், Kaankilaan - ஸேவிக்கப்பெற்றானில்லை.