திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2138 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ப்ரஹ்மா அறிய மாட்டான் ஆகில் நீர் பின்னை அறிந்த படி எங்கனே என்னில் திரு நாம த்வாரா அவனை ஆஸ்ரயித்து அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் – சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் – உஜ்ஜீவிப்பது அவனைப் பற்றி என்னும் இடமும் – அறிந்தேன் என்கிறார் – 57 | அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
சொன்மாலை கற்றேன் தொழுது. | பதவுரை Show / Hideஅயல் நின்ற, Ayal Nindra - (என்) அருகிலேயே இருந்துகொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக்கொண்டேயிருக்கிற வல் வினையை, Val Vinaiyai - மிகக் கடினமான பாவங்களைக் குறித்து அஞ்சினேன், Anjineen - பயப்பட்டேன்; அஞ்சி, Anji - (இப்படி) பயப்பட்டு உய, Uya - (இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு நின், Nin - உன்னுடைய திரு அடியே, Thiru Adiye - திருவடிகளில்தானே சேர்வான், Searvaan - வந்து கிட்டுகைக்காக நயம் நின்ற, Nayam Nindra - இன்பம் பொருந்திய நல் மாலை கொண்டு, Nal Maalai Kondo - சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு தொழுது, Thozhudhu - (உன்னை) ஆச்ரயித்து நமோ நாரணா என்னும் சொல் மாலை, Namo Naaranaa Ennum Sol Maalai - திருமந்திரத்தின் பொருளை கற்றேன், Kattren - அப்யஸித்தேன். |